செய்திகள் மலேசியா
குறைந்தபட்ச ஊதியத்தை 1,700 ரிங்கிட்டாக உயர்த்துவதால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கலாம்: டத்தோஸ்ரீ சரவணன் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
குறைந்தபட்ச ஊதியத்தை 1,700 ரிங்கிட்டாக உயர்த்துவதால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கலாம் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மக்களவையில் எச்சரித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
இதில் குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசாங்கம் இந்த ஊதிய உயர்வை முன்மொழிந்துள்ளது பாராட்டுக்குரியது.
ஆனால் முதலாளிகளின் கண்ணோட்டம் உட்பட அனைத்துக் கோணங்களில் இருந்தும் இந்த பிரச்சினையை கருத்தில் கொள்வது முக்கியம்.
அதிக ஊதியம் காரணமாக முதலாளிகள் தங்கள் பணியாளர்களைக் குறைக்க நிர்பந்திக்கப்படலாம்.
இது நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.
குறிப்பாக இது, நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கலாம்.
ஆகவே, அரசாங்கம் இந்த விவகாரத்தை முழுமையாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் மக்களவையில் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am