செய்திகள் மலேசியா
அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழா
கோலாலம்பூர்:
எதிர்வரும் 27ஆம்தேதி அக்டோபர் 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கோலாலம்பூர் ஜாலான் இல்முவில் அமைந்துள்ள மாஸா பல்கலைக்கழகத்தின் ஆடிட்டோரியம் மாஸா அவென்யுவில் அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழா நடைபெற இருக்கின்றது.
இந்த ஆண்டின் தேசிய மௌலிதுர் ரசூலின் கருப்பொருளான, நமது நாயகம் (ஸல்) அவர்களின் போதனையைக் கொண்டு நமது ஈருலக வாழ்வின் வெற்றியை நோக்கி உண்மையாக உழைத்திட வேண்டும் என்னும் கருப்பொருளிலேயே இந்தப் பெருவிழா அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நமது நாட்டின் சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்களான கம்போங் பண்டான் இமாம் உஸ்தாத் முஹம்மது சாலிஹ் மன்பஈ, கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா தலைமை இமாம் மௌலவி டாக்டர் செய்யது இப்ராஹிம் அல்-புஹாரி ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான சென்னை அடையார் பள்ளியின் தலைமை இமாம் மௌலானா டாக்டர் சதீதுத்தீன் பாகவி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த பெருவிழாவினை பெர்மிம், எம்.எம்.ஒய்.சி, பிரெஸ்மா, மாவார், சிம்ஸ், இஸ்லாமியக் கல்வி வாரியம் போன்ற அரசு சாரா அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
இம்மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து பொதுமக்களும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர் குழுவின் சார்பில் அஸ்ரின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேநீர், இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி இட வசதி உண்டு. தொழுகை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am