நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் அரிசியின் கையிருப்பு 5 மாதங்களுக்குப் போதுமானதாகவுள்ளது: மாட் சாபு 

கோலாலம்பூர்:

நாட்டில் தற்போது அரிசியின் கையிருப்பு 5 மாதங்களுக்கு மேல் போதுமானதாகவுள்ளது என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமத் சாபு தெரிவித்துள்ளார்.

மேலும், போதுமான உணவுப் பொருட்கள் குறிப்பாக அரிசி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் இருப்பை உறுதி செய்வதற்கான குறுகிய, நீண்ட காலத் திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகளை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதையும் அவர் குறிப்பிட்டார். 

இந்த நடவடிக்கையில் அவசரநிலை உட்பட பிற உற்பத்தி செய்யும் நாடுகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் அரிசியின் கையிருப்பு 1.1 மில்லியன் மெட்ரிக் டன்கள் உள்ளன. இவை 5.6 மாதங்களுக்குப் போதுமானது. 

அரிசி விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அரிசியில் 'ஸ்மார்ட் ஃபார்மிங்' (ஸ்மார்ட் ஃபார்மிங்) செல்ல முயற்சிக்கிறோம்.

ஆனால் அது மெதுவாக முன்னேறி வருகிறது. ஏனெனில் அரிசி விவசாயிகள் இன்னும் பாரம்பரியமாக தங்கள் நிலங்களில் வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று மாட் சாபு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

நாட்டின் உணவு கையிருப்பை உறுதி செய்வதற்கான அமைச்சகத்தின் உடனடித் திட்டம் குறித்துக் கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் Fathul Huzir Ayob கேட்ட கேள்விக்கு மாட் சாபு இவ்வாறு பதிலளித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset