நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானில் மீட்கப்பட்ட பிள்ளைகளுக்கான காவலை கோருவதில் தாய், தந்தைக்கு இடையே சண்டை: நான்சி சுக்ரி

கோலாலம்பூர்:

குளோபல் இக்வானில் மீட்கப்பட்ட பிள்ளைகளுக்கான காவலை கோருவதில் தாய், தந்தைக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.

இதுவொரு புதிய பிரச்சினையாக எழுந்துள்ளது என்று மகளிர், குடும்ப குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குளோபல் இக்வானில் இருந்து அதிகமான பிள்ளைகள் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் அப்பிள்ளைகளுக்கான காவலை கோருவதில் தாய்க்கும் தந்தைக்கும் இடையே கடும் சண்டை நிலவி வருகிறது.

அதே வேளையில் தாய், தந்தை இருவரும் தனித்தனியாக காவலில் வைக்கப்படுவதால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் சிக்கலானதாகிறது.

இப்படி அப்பிள்ளைகளின் காவல் விவகாரம் பெரும் பிரச்சினையாக இருந்தே வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset