நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காரின் பின் புறப் கண்ணாடி துடைக்கும் கருவியை உடைத்த வெளிநாட்டவர் கைது

பத்து பஹாட்:

பத்து பஹாட்டின் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் கார்களின் பின் புறப் கண்ணாடி துடைக்கும் கருவியை உடைத்த வெளிநாட்டவர் நேற்று கைது செய்யப்பாட்டார்.

25 வயதான வெளிநாட்டவரான சந்தேக நபர் தொடர்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என்று  பத்து பஹாட்  மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.

வீடியோ பதிவின் அடிப்படையில் இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு நடந்ததாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரின் முதுகுப்பையில் ஒரு கத்தியையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு,பிரிவு 6 (1) அரிக்கும் பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் 1958, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் வசித்ததற்காக குடிவரவு சட்டம் 1959/63 இன் பிரிவு 6 (1) இன் கீழ் விசாரணைக்காக அந்நபர் பத்து பஹாட் மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

- கௌசல்யா &  அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset