நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டிகை காலங்களில் வசதிக் குறைந்தவர்களுக்கு உதவுவதை ஒவ்வொரு மஇகா கிளைத் தலைவர்களும் இலக்காக கொண்டுள்ளனர்: டத்தோ ஆனந்தன்

கிள்ளான்:

பண்டிகை காலங்களில் வசதிக் குறைந்தவர்களுக்கு உதவுவதை ஒவ்வொரு மஇகா கிளைத் தலைவர்களும் இலக்காக கொண்டுள்ளனர்.

மஇகா தேசிய செயலாளர் டத்தோ ஆனந்தன் இதனை கூறினார்.

கிள்ளான் மஇகா தொகுதியின் ஏற்பாட்டில்  இன்று தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

120 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

கிள்ளான் தொகுதி மஇகா  தலைவர் தர்மலிங்கம், துணைத் தலைவர் என்பி ராமன், செயலாளர்  எம். சசிதரன், தொகுதி பொருட்பாளர்கள் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

தீபாவளி போன்ற பண்டிகைகளை வசதிக் குறைந்த மக்களும் மகிச்சியாக கொண்டாட வேண்டும் என்பது கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் சிந்தனையாகும்.

அவரின் சிந்தனைக்கு ஏற்ப ஒவ்வொரு கிளைத் தலைவர்களும் தங்களின் சக்திக்கு ஏற்ப உதவிகளை செய்து வருகின்றனர்.

அவர்களின் முயற்சி பாராட்டுக் குரியது. வரும் காலங்களிலும் இது தொடர வேண்டும் என டத்தோ ஆனந்தன் கூறினார்.

இந்த உதவி வழங்கும் நிகழ்வில் மஇகா ஊடகப் பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம், உலு லங்காட் தொகுதி ம இ கா தலைவர் ராசசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset