நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பன்னுவை கொலை செய்யும் முயற்சியில் ரா அதிகாரிக்கு தொடர்பு: அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்:

காலிஸ்தான் தலைவர் குர்பந்த்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்ததில்  இந்திய உளவுப் பிரிவு அமைப்பான ரா-வின் முன்னாள் அதிகாரியான விகாஸ் யாதவுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் பன்னு குடியுரிமை பெற்றுள்ளார். அவரை கொலை செய்ய பணம் அளித்ததாக இந்தியரான நிகில் குப்தா கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.  

இந்நிலையில், காலிஸ்தான்  அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்கள் தன்னையும் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னுன் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது ரா அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset