
செய்திகள் இந்தியா
வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டு மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது
சூரத்:
சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்கு 623 வங்கிக் கணக்குகளை வாடகைக்கு வழங்கி மோசடி செய்ததாக நான்கு பேரை குஜராத் போலீஸார் கைது செய்தனர்.
பல்வேறு இணையவழி குற்றங்கள் மூலம் திருடப்பட்ட ரூ.111 கோடியை இந்த கணக்குகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சூரத் மாவட்டத்தில் உள்ள மோட்டா வராச்சா பகுதியில் போலீஸார் சோதனை நடத்தியபோது, இணையவழி குற்றங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொண்டிருந்த மூவர் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
அவர்கள் துபை மற்றும் சீனாவை தளமாகக் கொண்டு செயல்படும் இணையவழி மோசடி கும்பல்களுக்கு 623 வங்கிக் கணக்குகளை வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்தகணக்குகள்வழியே பல்வேறு இணையவழி குற்றங்கள் மூலம் திருடப்பட்ட ரூ.111 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 623 கணக்குகள் மீது 866 இணையவழி மோசடி புகார்களும், 200 எஃப்ஐஆர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீஸார் தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm