நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 பட்ஜெட்டில் தெளிவான கட்டமைப்பு இல்லை: ராட்ஸி

கோலாலம்பூர்:

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை செயல்படுத்த தெளிவான கட்டமைப்பு அரசாங்கத்திடம் இல்லை.

பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் ராட்ஸி ஜிடின் இதனை  கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதில் பிரதமர்  மேலும் விளக்கம் இல்லாமல் பொதுவாக முன்முயற்சியை மட்டுமே குறிப்பிட்டார்.

பொருளாதாரத் தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் நாடு எவ்வாறு இயக்கப்பட வேண்டும். 

பொருளாதாரக் கட்டமைப்பு அல்லது மூலோபாயத்தின் சூழலில் பெரிய கட்டமைப்பு என்ன என்பது குறிப்பிடப்படவில்லை.

முதலீட்டாளர்கள், சந்தை ஆய்வாளர்களுக்கு மிகவும் கடினமாக இருப்பது என்னவென்றால், பட்ஜெட் 2025 இல் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான விஷயங்களின் விவரங்கள் கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset