செய்திகள் இந்தியா
இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: பள்ளி மாணவன் கைது
மும்பை:
கடந்த சில நாள்களாக சமூக ஊடகம் மூலம் தொடர்ந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவரை மும்பை காவல்துறை கைது செய்தது.
பெட்டிக் கடைக்காரரை சிக்க வைக்க இந்த மாணவர் போலி சமூக ஊடக கணக்கைத் தொடங்கி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
மும்பையிலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு எக்ஸ் சமூக வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அளிக்கப்பட்டது.
இந்த விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்புச் சோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டறியப்பட்டது.
இதேபோல் டெல்லியிலிருந்து சிகாகோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தமிழகத்தின் மதுரையிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் என 3 நாள்களில் 19 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள், பணியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த மிரட்டல் விவகாரத்தை விசாரித்த மும்பை போலீஸார் சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கானைச் சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவரை கைது செய்தனர்.
சிறுவனுக்கு 4 நாள்கள் காவல் வழங்கப்பட்டது.
மாணவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின்படி வீட்டின் அருகேயுள்ள கடைக்காரருக்கும் மாணவருக்கும் இடையே நிதி விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
கடைக்காரரின் பெயரில் எக்ஸ் தளத்தில் போலி கணக்கை தொடங்கிய மாணவர், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 9:05 am
பள்ளிவாசலுக்குள் புகுந்து ஜெய்ஸ்ரீராம் என்று கத்துவது மத உணர்வுகளை புண்படுத்தாது: கர்நாடக உயர்நீதிமன்றம்
October 18, 2024, 8:00 am
காஷ்மீர் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்: சீனா - பாகிஸ்தான்
October 17, 2024, 3:38 pm
மலேசியாவிலிருந்து சென்னைக்குக் குரங்கு, பச்சோந்திகள் கடத்தல்: பெண் பயணி உட்பட 2 பேர் கைது
October 17, 2024, 11:33 am
உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்த புதிய “நீதி தேவதை” சிலை: சமத்துவத்தின் புதிய முகம்
October 17, 2024, 11:28 am
11,000 வைரக் கற்களால் உருவாக்கப்பட்ட ரத்தன் டாடாவின் உருவப்படம்
October 17, 2024, 8:43 am
இரு நாட்களாக கடும் மழை: வெள்ளத்தால் நிலைகுத்தியது பெங்களூரு
October 16, 2024, 4:18 pm
இந்திய வெளியுறவு அமைச்சரை, உற்சாகமாக வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
October 14, 2024, 6:15 pm
இன்றிலிருந்து மும்பைக்குள் நுழையும் கார்களுக்கு சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் இல்லை
October 14, 2024, 5:53 pm