செய்திகள் மலேசியா
2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.
பெர்சத்து சயாப் பிரிவின் சிரம்பான் தொகுதி தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் அறிவிக்கவிருக்கும் பட்ஜெட் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போது மித்ராவின் வாயிலாக 100 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்ப்படுகிறது.
ஆனால் நாளைய பட்ஜெட்டில் இன்னும் கூடுதல் நிதி ஒடுக்கப்பட வேண்டும்.
அதே வேளையில் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
இதுவே எனது எதிர்பார்ப்பு என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 1:47 pm
கிள்ளானில் வெள்ளத்தால் தீபாவளி ஏற்பாடுகள் முடங்கின
October 18, 2024, 1:32 pm
சிகரெட் வாங்க வெளியே சென்ற ஆடவர் காணவில்லை
October 18, 2024, 1:13 pm
முத்தம் கொடுப்பதன் மூலம் எச்ஐவி நோய் பரவாது: ஆய்வில் தகவல்
October 18, 2024, 12:51 pm
மலேசியாவில் அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோய்: இந்தியப் பெண்கள் முதலிடம்
October 18, 2024, 12:16 pm
சபாவிலிருந்து 377 பிலிப்பைன்ஸ் நாட்டினர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
October 18, 2024, 12:02 pm
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் உடல் நிலையில் முன்னேற்றம்: ஐ.ஜி.என் தகவல்
October 18, 2024, 11:11 am
மோட்டார் சைக்கிள்- வேன் விபத்து: முதலாம் ஆண்டு மாணவர் மரணம்
October 18, 2024, 10:47 am
2025-ஆம் ஆண்டு வரவுச் செலவு திட்டம்: மக்களின் நம்பிக்கையைப் பூர்த்திச் செய்யுமா?
October 18, 2024, 10:31 am