நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளானில் வெள்ளத்தால் தீபாவளி ஏற்பாடுகள் முடங்கின

கிள்ளான்:

கிள்ளானில் வெள்ளத்தால் தீபாவளி ஏற்பாடுகள் முடங்கிய நிலையில் பொதுமக்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

அடிக்கடி திடீர் வெள்ளம் ஏற்படுதல், விலைவாசி உயர்வு ஆகிய காரணங்கள் மக்களுக்கு வேதனையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

தெங்கு கிளானா,காப்பார், பந்திங் , கோலா சிலாங்கூர்,மேரு ஆகிய இடங்கள் பண்டிகை காலங்களில் இந்தியர்கள் அதிகம் வருகை புரிவதாகக் கிள்ளான் லிட்டல் இந்தியா தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சார்லஸ் மணிகன் கூறியுள்ளார். 

இவ்வாறு இருக்கையில், வெள்ளம் வருவதினால் உணவுப் பொருட்களின் விலைகள் பின்னர் அதிகரிக்கக்கூடும் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். 

ஆக, வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாநகர மன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- சாமுண்டிஸ்வரி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset