நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிகரெட் வாங்க வெளியே சென்ற ஆடவர் காணவில்லை 

பாலிக் புலாவ்:

மூன்று மாதங்களுக்கு முன், சிகரெட் வாங்க வெளியே சென்ற ஆடவர் காணாமல் போனார்.

23 வயது ஆடவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

முஹம்மத் ஹஸ்ரி அபு ஹாசன் இன்று வரை வீடு திரும்பவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் பத்து மாவுங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முஹம்மத் ஹஸ்ரி அபு ஹாசன் ஜூலை 16-ஆம் தேதி சிகரெட் வாங்க வெளியே சென்றுள்ளார். 

முன்னதாக, அவர் மன அழுத்ததில் இருந்ததாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஜூன் மாதம் 4-ஆம் தேதியிலிருந்து 15-ஆம் தேதி வரை அவர் பேராக் கிளினிக்கில் மனநலச் சிகிச்சையும் பெற்றுள்ளார். 

எனவே, தகவல் தெரிந்த பொதுமக்கள் பத்து மாவுங் காவல் நிலையத்திற்கு விவகம் கொடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- தர்மாவதி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset