நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டியின் இறுதி சுற்றுக்கு 10 பேர் தேர்வு: குணராஜ்

கிள்ளான்:

சிலாங்கூர் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டியின் இறுதி சுற்றுக்கு 10 பேர் தேர்வு பெற்றனர்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

செந்தோசா சட்டமன்ற மக்கள் மையத்தின் ஏற்பாட்டில் 4ஆவது ஆண்டாக இப்போட்டி நடத்தப்பட்டது.

இந்திய பிள்ளைகள் இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

இவ்வாண்டும் 178 பேர் இப்போட்டியின் தொடக்க சுற்றில் கலந்து கொண்டனர்.

20 பேர் அரையிறுதி சுற்றில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

இதில் சிறந்த 10 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இம்மாபெரும் இறுதி சுற்று வரும் அக்டோபர் 26ஆம் தேதி புக்கிட்ஜாலிலில் நடைபெறவுள்ளது.

அஜெண்டா சூரியா நிறுவனத்துடன் இணைந்து இந்த இறுதி சுற்று நடத்தப்படுகிறது.

ஆகவே பொது மக்கள் திரளாக வந்து இப்போட்டிக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்.

இதற்கான நுழைவு இலவசம் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset