நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு வகை போதைப் பொருளை போலிசார் பறிமுதல் செய்தனர்

கோலாலம்பூர்:

10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு வகை போதைப் பொருளை போலிசார் பறிமுதல் செய்தனர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் காவ் கோக் சின் இதனை கூறினார்.

காஜாங் பெர்டானாவில் சந்தேக நபர் ஓட்டிச் சென்ற காரை போலிசார் சோதனையிட்டனர்.

அப்போது அக்காரில் இருந்து  சுமார் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 315 கிலோ ஷாபு வகை போதைப்பொருளை  அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதே வேளையில் துரித உணவு உணவகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கைதான ஆடவர் போதைப் பொருள் விநியோகிப்பாளர் ஆவார்.

மேலும் ஒவ்வொரு விநியோகிப்புக்கும் சந்தேக நபருக்கு 10,000 ரிங்கிட் வரை பணம் வழங்கப்பட்டதாக விசாரணை முடிவுகளில் தெரிய வந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset