செய்திகள் மலேசியா
4 ஆண்டுகளில் 3,847 குழந்தைகள் காணாமல் போன சம்பவங்கள் பதிவு: சைஃபுடின் நசுத்தியோன்
கோலாலம்பூர்:
2020-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை சுமார் 3,847 குழந்தைகள் காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
நண்பர்கள், காதலர்களைப் பின் தொடர்வது, குடும்பத்திலிருந்து பிரிந்து செல்வது, சுதந்திரமாக வெளியே சுற்றி திரிய வேண்டும் என்ற எண்ணம் ஆகிய காரணங்கள் இந்த நாட்டில் குழந்தைகள், பதின்ம வயதினர் காணாமல் போவதற்கான முக்கிய காரணங்களாகத் திகழ்கின்றன என்று அவர் கூறினார்.
ஆண்டுக்குச் சராசரியாக 770 குழந்தைகள், பதின்ம வயதினர் காணாமல் போகும் சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பதிவு செய்யப்பட்ட 3,847 சம்பவங்களில் 18 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையர்களின் காணாமல் போனவர்களில் 96 விழுக்காட்டினரைக் காவல்துறை மீண்டும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
10 பேர் மீட்பதற்குள் மரணமடைந்துள்ளனர்.
காணாமல் போன குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வயதைப் பொறுத்தவரை, 13-15 வயதுக்குட்பட்டவர்கள் 54 சதவீதமாகவும், 16-18 வயதுக்குட்பட்டவர்கள் 37 சதவீதமாகவும் உள்ளனர் என்று சைஃபுடின் வலியுறுத்தினார்.
மேலும், காணாமல் போனவர்களில் ஆண்களைக் (26%) காட்டிலும் பெண்களே(76%) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, குற்றவியல் புலனாய்வுத் துறை ஏற்கனவே காணாமல் போன குழந்தைகள் தொடர்பான சம்பவங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
- கௌசல்யா & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am