நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகடிவதைக்கு இலக்கானதாக நம்பப்படும் மற்றொரு மருத்துவர் மரணம்; உள் விசாரணை துரிதமாக நடக்கிறது: சுகாதார அமைச்சர்

புத்ராஜெயா:

பகடிவதைக்கு இலக்கானதாக நம்பப்படும் மற்றொரு மருத்துவர் மரணமடைந்துள்ளார்.

சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.

பினாங்கு செபராங் ஜெயா மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சியாளர் ஒருவர் சேவையில் இருந்தபோது  பகடிவதைக்கு இலக்கானதாக நம்பப்படுகிறது. இதனால் அவர் மரணமடைந்துள்ளார்.

இது குறித்து புகார் வந்தவுடன்  முதல் கட்டமாக உள் விசாரணைகள் நடத்தப்பட்டது .

மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு வழக்கை முழுமையாக ஆராய ஒரு சுயாதீன குழுவை நிறுவுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

மருத்துவர்கள் பகடிவதைக்கு இலக்காகும் வழக்குகளைத் தடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கத் தாமதமாகிறது என்று சில தரப்பினர் கூறுவதை நான் அறிவேன்.

ஆனால் சுகாதார அமைச்சு இதுபோன்ற விவகாரங்களில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மட் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் @ தர்மாவதி

தொடர்புடைய செய்திகள்

+ - reset