செய்திகள் மலேசியா
துன் டாய்ம் அசுந்தா மருத்துவமனையில் அனுமதி
பெட்டாலிங்ஜெயா:
முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் நேற்று அசுந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அவர் இன்றைய விசாரணையில் ஆஜராக முடியாது என்று வழக்கறிஞர் குர்டியல் சிங் நிஜார் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், 86 வயதான டாய்ம் ஏன் அசுந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று வழக்கறிஞர் குறிப்பிடவில்லை.
துன் டாயிமின் மனநல மதிப்பீட்டை நடத்துவதற்கான அரசுத் தரப்பு விண்ணப்பத்தை எதிர்ப்பதற்கு வாதங்களைத் தயாரிக்க அவரின் வழக்கறிஞர்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை.
விசாரணை நீதிபதி அசுரா அல்வியிடம் வழக்கறிஞர் குர்டியல் சிங் நிஜார் இதனை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விண்ணப்பத்திற்கு பாதுகாப்பு குழுவின் ஆட்சேபனைகளை கேட்க நீதிபதி அசுரா நவம்பர் 20 ஆம் தேதியை நிர்ணயித்தார்.
மேலும் அன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளில் டாய்ம் கலந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am