நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாய்ம் அசுந்தா மருத்துவமனையில் அனுமதி

பெட்டாலிங்ஜெயா:

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் நேற்று அசுந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் அவர் இன்றைய விசாரணையில் ஆஜராக முடியாது என்று  வழக்கறிஞர் குர்டியல் சிங் நிஜார் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், 86 வயதான டாய்ம் ஏன் அசுந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று வழக்கறிஞர் குறிப்பிடவில்லை.

துன் டாயிமின் மனநல மதிப்பீட்டை நடத்துவதற்கான அரசுத் தரப்பு விண்ணப்பத்தை எதிர்ப்பதற்கு வாதங்களைத் தயாரிக்க அவரின் வழக்கறிஞர்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை.

விசாரணை நீதிபதி அசுரா அல்வியிடம் வழக்கறிஞர் குர்டியல் சிங் நிஜார் இதனை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பத்திற்கு பாதுகாப்பு குழுவின் ஆட்சேபனைகளை கேட்க  நீதிபதி அசுரா  நவம்பர் 20 ஆம் தேதியை நிர்ணயித்தார்.

மேலும் அன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளில் டாய்ம் கலந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset