நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சந்தேக நபர்களின் காரை நோக்கி 7 முறை சுட்ட போலிசார்: தப்பியோடிய நால்வருக்கு வலைவீச்சு

உலுசிலாங்கூர்:

காரை நிறுத்தாமல் தப்பியோட முயன்ற காரை நோக்கி போலிசார் 7 முறை சுட்ட்டனர்.

இந்த சம்பவம் அதிகாலை 2.41 மணியளவில் செரண்டாவில் நடந்தது என்று உலுசிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் அஹ்மத் பைசால் தஹ்ரிம் கூறினார்.

ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலிஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையின் மிட்சுபிஷி ட்ரைடன் கரை நிறுத்த கூறி எச்சரித்தனர்.

ஆனால் காரில் இருந்த நால்வர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

அதே வேளையில் போலிஸ் வாகனத்தையும் அவரகள் மோதி தப்பியோட முயற்சித்தனர்.

இதனால் போலிசார் அவ்வாகனத்தை நோக்கி 7 முறை சுட்டனர்.

உடனே சந்தேக நாபர்களை காரை சாலையில் விட்டு தப்பியோடினர்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாவர்.

அவர்கள் மீத்உ குற்றவியல், போதைப்பொருள் பதிவுகளை கொண்டவர்கள்.

சந்தேக நபரின் வாகனத்தை சோதனை செய்ததில் கொள்ளைக்கு பயன்படுத்தப்படும் அரிவாள், ஆட்டு நகம், சுத்தியல், ஸ்க்ரூடிரைவர் போன்றவற்றை போலிசார் கண்டெடுத்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset