நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வான் விவகாரத்தில் அரச விசாரணை ஆணையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிடவில்லை: சைபுடின்

கோலாலம்பூர்:

குளோபல் இக்வான் விவகாரத்தில் அரச விசாரணை ஆணையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிடவில்லை.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

குளோபல் இக்வான் குழுவைச் சேர்ந்த மீதமுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள், நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

அதனால் போலிசுக்கு கூடுதல் நேரம்மும் அதிக நம்பிக்கையும் கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் குளோபல் இக்வானின் வெளிநாட்டு நடவடிக்கைகளையும் போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

சட்டப் பார்வையில் குற்றங்கள் இருந்தால் இண்டர்போல் உட்பட அனைத்து தரப்பினரின் உதவியும் நாடப்படும்.

மக்களவையில் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset