நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இன்றிலிருந்து மும்பைக்குள் நுழையும் கார்களுக்கு சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் இல்லை 

மும்பை: 

மும்பைக்குள் நுழையும் கார்கள், சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது, இன்று நள்ளிரவு முதலே அமலுக்கு வருவதாகவும், இதனால், சுங்கச் சாவடிகளில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாட்டின் வணிக தலைநகராக இருக்கும் மும்பை மாநகரின் எல்லைக்குள் இருக்கும் ஐந்து சுங்கச் சாவடிகளிலும், இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இன்று மகாராஷ்டிர மாநில அமைச்சரவைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset