செய்திகள் கலைகள்
70ஆவது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்
புதுடில்லி:
இந்தியாவின் 70ஆவது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 விருதுகள் வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய திரை படைப்புகளுக்கு இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது.
இதற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது. 70ஆவது தேசிய திரைப்பட விருது கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
2022-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று டில்லியில் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் அதிபர் திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இதில் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்), சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ளது.
இதற்கான விருதை குடியரசு தலைவரான திரவுபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2024, 5:18 pm
சிங்கப்பூர் ‘சிவாஜி’ அசோகன் காலமானார்
October 12, 2024, 10:30 am
Doraemon-க்குக் குரல் கொடுத்த நோபுயோ ஓயாமா காலமானார்
October 10, 2024, 1:18 pm
வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு டிஎஸ்ஜி சிறப்பு வருகை
October 7, 2024, 4:32 pm
ஜீ தமிழின் மகா நடிகை நிகழ்ச்சி: சாந்தினி கோர் மலேசியா சார்பாக கலந்து கொள்கிறார்
October 6, 2024, 1:33 pm
பாலியல் புகார் காரணமாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு
October 4, 2024, 6:52 pm
கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்: ஏமாற்றத்தில் தொண்டர்கள்
October 4, 2024, 10:23 am