
செய்திகள் மலேசியா
சுங்கைபூலோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
சுங்கைபூலோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்.
அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
தொடர் கனமழையைத் தொடர்ந்து சுங்கைபூலோ கம்போங் பாயா ஜெராஸ், கம்போங் குபு காஜா உட்பட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இம்மையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நாடாளுமன்றத் தொகுதியின் சேவை மையத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்படும்.
அதே வேளையில் இம்மக்களுக்கு உதவும் நோக்கில் அனைத்து அரசு துறைகளுடன் இணைந்து செயல்படவும் எனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
குறிப்பாக பாதிக்கப்ப்பட்ட மக்களின் நலனில் முழு அக்கறை செலுத்தப்படும்.
மேலும் சுங்கைப்பூலோவி வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சினையை களைவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பாயா ஜெராஸ் வெள்ள நிவாரண மையங்களில் மக்களை சந்தித்த டத்தோ ரமணன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm