செய்திகள் மலேசியா
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
குவாந்தான்:
பஹாங் மாநிலத்தில் நோன்புப் பெருநாள் - அய்டில்ஃபித்ரி தொழுகை நாள் நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு ஆவணத்தைப் பஹாங் மாநில முப்தி துறை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
அந்த ஆவணம் போலியானது என்றும் அது பஹாங் மாநில முப்தி துறையால் வெளியிடப்பட்டதல்ல என்றும் சம்பந்தப்பட்ட தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், சரியான தகவல்களைப் பெற பஹாங் மாநில முப்தி துறை அல்லது அந்த மாநிலத்தின் மத அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“இந்தப் போலி ஆவணத்தின் பரவல் தொடர்ந்து நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்கான வாய்ப்பையும் பஹாங் மாநில முப்தி துறை நிராகரிக்கவில்லை.
“போலி செய்திகளைத் தடுக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது,” என்று அந்தத் துறை இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, மார்ச் 20 அன்று காலை 8.45 மணிக்கு பஹாங் மாநிலத்தில் அய்டில்ஃபித்ரி தொழுகை நடைபெறும் எனக் கூறி ஒரு அதிகாரப்பூர்வ கடிதம் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஒரு ஆவணம் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
March 14, 2026, 1:30 pm
கடைக்குடியிருப்பில் ஆண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
