நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணியின் புதிய பொதுச் செயலாளராக டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பாஸ் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாக இருந்த பொருளாளர் பதவியை டத்தோஸ்ரீ சனுசி நோர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தேசியக் கூட்டணி தலைவராக இருக்கும் சம்சூரி கெராக்கான் தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட கூட்டணிக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை அறிவித்தார்.

மேலும் ஒவ்வொரு கூறுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் துணைத் தலைவர்களின் வரிசையையும் அவர் அறிவித்தார்.

அதாவது டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் (பெர்சத்து); டோமினிக் லாவ் (கெராக்கான்); புனிதன் (எம்ஐபிபி) துவான் இப்ராஹிம் துவான் மான் (பாஸ்) ஆகியோர் இதில் அடங்குவர்.

துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு, அஸ்மின் அலி, வோங் சியா ஜென், சிவக்குமார் கிருஷ்ணன் ஆகிய மூன்று தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் டான்ஸ்ரீ அனுவர் மூசா தேசியக் கூட்டணியின் தகவல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல்களுக்கான இயக்குநர் பதவியை பெர்சத்து துணைத் தலைவர் ராட்ஸி ஜிடின் வகிக்கிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset