செய்திகள் மலேசியா
1 எம்டிபி வழக்கில் நஜீப் விடுதலை செய்யப்படுவாரா?: அக்டோபர் 30ஆம் தேதி முடிவு
கோலாலம்பூர்:
1 எம்டிபி வழக்கில் நஜீப் தன்னை தற்காத்துக் கொள்ள அழைக்கப்படுவாரா அல்லது விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்விக்கான முடிவு அக்டோபர் 30ஆம் தேதி அறிவிக்கப்ப்படும்.
உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லோரன்ஸ் செக்வேரா இதனை தெரிவித்தார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 1எம்டிபி ஊழல் வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 19 முதல் 12 நாட்களுக்கு அரசுத் தரப்பு, நஜீப் தரப்பு வாதங்களை நீதிபதி செவிமடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமா அல்லது,
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்று முடிவு வரும் அக்டோபர் 30ஆம் தேதி அறிவிக்கப்படும்.
மேலும் இரு தரப்பினரின் ஆழமான வாதங்களுக்கும் நல்ல ஆராய்ச்சிக்கும் நன்றி என நீதிபதி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 11:17 pm
இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்கள் கட்டாயம் வருகை அட்டைகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
April 22, 2026, 9:24 pm
நாளை முதல் டீசலின் விலை 85 சென் குறைகிறது
April 22, 2026, 5:49 pm
மலாக்கா நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது
April 22, 2026, 5:44 pm
தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் ஆர்எஸ்-1 அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை: அமிரூடின் ஷாரி
April 22, 2026, 5:43 pm
டான்ஶ்ரீ இசா சமத்தின் மறு ஆய்வு மனு: மே 13ஆம் தேதி விசாரிக்கப்படும்
April 22, 2026, 5:32 pm
