நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் விவகாரம்: சாலை விரிவாக்க பணிகளுக்கு குடியிருப்புவாசிகள் ஆதரவு தெரிவிப்பு 

செலாயாங்: 

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் விவகாரம் தொடர்பில் சாலை விரிவாக்க பணியை முன்னெடுக்கவிருக்கும் மாநில அரசாங்கத்தின் திட்டத்திற்கு 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆதரவு அளித்துள்ளன என்று KETUA KOMUNITI MASYARAKAT INDIA DUN SUNGAI TUA வின் தலைவர் வீ.எஸ்.இராமன் கூறினார் 

சாலை விரிவாக்க பணிகளுக்காக சில வீடுகள் உடைபடும் சூழலை எதிர்கொண்டுள்ளன. அதில் தமது வீடும் அடங்கும் என்று வீ.எஸ்.ராமன் கூறினார். ஒரு நல்ல நோக்கத்துகாக மாநில அரசாங்கம் இந்த திட்டத்தை முன்னெடுக்கிறது 

இதற்கு இங்குள்ள குடியிருப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு தங்கள் தரப்புக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் யாவும் அபாண்டமான பொய்யாகும் என்று அவர் சொன்னார் 

இந்நிலையில் மாநில அரசாங்கம் விரைந்து இந்த பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் பகுதிகளில் சாலை அமைக்கும் பகுதிகளை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று வீ.எஸ்.ராமன் கூறினார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset