
செய்திகள் மலேசியா
பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் செய்தியாளர் கூட்டத்தில் சலசலப்பு; இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம்
செலாயாங்:
நேற்றிரவு பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் செய்தியாளர் கூட்டம் நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் பகுதியில் அடிப்படை வசதிகளை கொண்டு வர, குறிப்பாக சாலை விரிவாக்க பணிகளுக்காக 32 வீடுகள் உடைபடும் சூழல் எதிர்நோக்கியிருப்பதால் அது தொடர்பான கூட்டம் நேற்றிரவு நடந்தது.
அடிப்படை வசதிகளைக் கொண்டு வருவதற்கான கருத்து கேட்கும் கூட்டமும் அதனுடன் செய்தியாளர்கள் சந்திப்பும் நடப்பதாக இருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினர் கூச்சல் குழப்பம் எழுப்பி நிலைமையை மேலும் சிக்கலாக்கினர்
இதனால், இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியது. இரு தரப்பு நபர்களும் தங்களுக்கான வாதங்களை முன்வைத்தனர்.
பிறகு, எந்தவொரு தீர்வும் இல்லாமல் இந்த கூட்டம் நிறைவு பெற்றது. நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று நடந்த கூட்டமானது மூன்றாம் தரப்பினரால் திசைதிருப்பப்பட்டு வேண்டுமேன்றே கூச்சல் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த வீ.எஸ். ராமன் குற்றஞ்சாட்டினார்
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 5:20 pm
ரமலான் உதவிகள் வழங்குவதில் டெங்கில் வட்டார மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்: டத்தோ அப்துல் ஹமித்
March 11, 2025, 4:52 pm
தாமதம் ஏற்பட்டாலும் LCS திட்ட முன்னேற்றத்தில் அரசாங்கம் திருப்தி அடைகிறது: காலிட் நோர்டின்
March 11, 2025, 3:45 pm
முறையான உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் வியட்நாமிய மருத்துவர் கைது
March 11, 2025, 3:43 pm
Era FM வானொலி நிர்வாகம், Maestra Broadcast-க்கு RM250,000 அபராதம்: எம்சிஎம்சி
March 11, 2025, 3:27 pm
DAP கட்சி தேர்தலில் வாக்குகள் வாங்கப்படவில்லை: தேசிய DAP நிர்வாக செயலாளர் ஸ்டீவன் சிம் விளக்கம்
March 11, 2025, 2:12 pm
புக்கிட் மெர்தாஜாமில் போலீசாரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார்
March 11, 2025, 12:23 pm