செய்திகள் உலகம்
இஸ்ரேலின் சக்திவாய்ந்த மொசாட் தலைமையகத்தை தாக்கிய ஈரான்
ஜெருசலம்:
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம், இந்தத் தாக்குதல் சம்பங்களில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மறைமுக உதவி செய்துவருவதாக தொடர்ந்து இஸ்ரேல் குற்றம் சாட்டிவந்த நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் அரசு நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் லெபனான் மீது வான் வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது.
இதனையடுத்து ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி பயங்கர தாக்குதலை நடத்தியது.
இதில் உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்பாக கருதப்படும் மொசாட் தலைமையகத்தை குறி வைத்தும் ஈரானில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்நிலையில், மொசாட், விமானப்படை தளங்களை குறி வைத்து ஈரான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து: ஜென்மனியர்கள் உட்பட 11 பேர் மரணம்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
