
செய்திகள் உலகம்
இஸ்ரேலின் சக்திவாய்ந்த மொசாட் தலைமையகத்தை தாக்கிய ஈரான்
ஜெருசலம்:
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம், இந்தத் தாக்குதல் சம்பங்களில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மறைமுக உதவி செய்துவருவதாக தொடர்ந்து இஸ்ரேல் குற்றம் சாட்டிவந்த நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் அரசு நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் லெபனான் மீது வான் வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது.
இதனையடுத்து ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி பயங்கர தாக்குதலை நடத்தியது.
இதில் உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்பாக கருதப்படும் மொசாட் தலைமையகத்தை குறி வைத்தும் ஈரானில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்நிலையில், மொசாட், விமானப்படை தளங்களை குறி வைத்து ஈரான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 5:43 pm
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றும் முதல் நாடாக UAE விளங்குகிறது
April 23, 2025, 12:40 pm
சீனா மீதான 145 சதவீத வரி அதிகமாக இருப்பதை டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்
April 22, 2025, 12:49 pm
போப் ஃபிரான்சிஸ் பக்கவாதம், இதயச் செயலிழப்பால் காலமானார்: வத்திகன் தகவல்
April 21, 2025, 5:09 pm
அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்குச் சீனா எச்சரிக்கை
April 21, 2025, 4:36 pm
31-ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறவுள்ளார் கமி ரீட்டா
April 21, 2025, 4:32 pm
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்
April 21, 2025, 10:48 am