நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு பிரதமர் பாகிஸ்தான் சென்றடைந்தார்

இஸ்லாமாபாத்:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றடைந்தார்.

பிரதமர் பயணித்த விமானம் மலேசிய நேரப்படி நேற்று இரவு 11 மணியளவில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்தில் தரையிறங்கியது.

விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமரை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் ஜமால் கமால் கான்,  திப்பு சுல்தானின் நெறிமுறைத் தலைவர், மலேசியாவுக்கான தூதர் சையத் அஹ்சன் ரசா ஷா ஆகியோர் வரவேற்றனர்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஹசன், பாகிஸ்தானுக்கான மலேசிய  தூதர் முகமது அசார் மஸ்லான் ஆகியோரும் பிரதமருடன் சென்றுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset