
செய்திகள் மலேசியா
நவம்பர் மாதம் தொடங்கி 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட் மலேசியா தகவல்
புத்ரா ஜெயா:
வடகிழக்கு பருவமழை காலம் இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
அதற்கான காலப்பகுதியில், மலேசியாவில் நான்கு முதல் ஆறு வரையில் தொடர்ச்சியான கடுமையான மழை பொழியுமென கணிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் வியூகப் பிரிவின் துணை இயக்குநர் Ambun Dindang தெரிவித்துள்ளார்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு டிசம்பர் முதல் அடுத்தாண்டு ஜனவரி வரை சபா, சரவாக் மாநிலங்களில் கனமழைக்கு அதிகம் வாய்ப்புள்ளது என்று மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
மேலும், வலுவான பருவமழை, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருந்தால் மேற்கு கடற்கரை மாநிலங்களிலும் தொடர்ச்சியான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm