நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் அன்வார் வல்லவராக இருக்கக்கூடாது: ஹனிபா மைடின்

கோலாலம்பூர்:

போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வல்லவராக இருக்கக்கூடாது.

மாறாக அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அமானா கட்சியைச் சேர்ந்த முஹம்மத் ஹனிபா மைடின் இதனை கூறினார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சீர்திருத்தம்,  நீதிக்காக அன்வார் போராடி வருகிறார்.

ஆகையால் போலிஸ் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகாங்கில் 25 வயதான பூர்வக்குடி நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்ட மரணம் குறித்து ஹனிபா கருத்து தெரிவித்தார்.

முன்னதாக 1998ஆம் ஆண்டு சிறையில் இருந்த போது தான் அனுபவித்த தாக்குதல் தொடர்பாக அன்வார் கடந்த மாதம் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset