
செய்திகள் மலேசியா
வருங்கால சவால்களுக்கு ஏற்ப அடுத்த தலைமுறையை உருவாக்கும் கடமை ஆசிரியப் பெருந்தகையினருக்கு உண்டு: டத்தோஶ்ரீ சரவணன்
கிள்ளான்:
வருங்கால சவால்களுக்கு ஏற்ப அடுத்த தலைமுறையை உருவாக்கும் கடமை ஆசிரியப் பெருந்தகையினருக்கு உண்டு.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
கோவிட்-19 தொற்று உலகளாவிய நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால் அத்தொற்று நோய் வரவில்லை என்றால் வீட்டில் இருந்து படிப்பது, வேலை செய்வது போன்றவை நமக்கு தெரியாமல் இருந்திருக்கும்.
அதே வேளையில் இனி வரும் காலங்களில் பல்வேறு மாற்றங்களைத் தொழில் ரீதியாகவும், இயற்கை வளங்களிலும், வாழ்க்கைச் சூழலிலும் நாம் எதிர்நோக்குவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை உருவாக்கும் கடமை ஆசிரியப் பெருந்தகையினருக்கு உண்டு.
மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநாட்டில் உரையாற்றிய டத்தோஶ்ரீ சரவணன் இதனை கூறினார்.
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே. அந்தக் கல்வியை வழங்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
அவ்வகையில் மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதில் மகிழ்ச்சி.
தலைமையாசிரியர் எஸ்எஸ் பாண்டியன் இக்கழகத்தின் தலைவராக பொறுப்பு வகிப்பதுடன் சிறந்த சேவையையும் செய்து வருகிறார்.
அவருக்கு எனது பாராட்டுகள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 12:46 pm
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
July 16, 2025, 12:42 pm
தியோ பெங் ஹொக் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க தயாராகும் ஊழல் தடுப்பு ஆணையம்
July 16, 2025, 12:31 pm
குழந்தையின் பாலியல் துன்புறுத்தல் காணொலி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உண்மை: சைபுடின்
July 16, 2025, 11:52 am
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
July 16, 2025, 11:14 am
வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு
July 16, 2025, 10:50 am
நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு
July 16, 2025, 10:26 am