நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யாயாசான் அகால்புடி நிதி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதுடன், விடுதலை கோரி ஜாஹித் விண்ணப்பம்

புத்ராஜெயா:

யாயாசான் அகால்புடி நிதி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதுடன், விடுதலை கோரி துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி விண்ணப்பம் செய்துள்ளார்.

துணைப் பிரதமரின் இந்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பிப்ரவரி 24 அன்று விசாரிக்கும்.

அவரது வழக்கறிஞர் ஹிஸ்யாம் தே போக் தேய்க் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த விசாரணை ஆரம்பத்தில் இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஜாஹிட் தரப்பில் இருந்து பல சமர்ப்பிப்புகளுக்கு பதிலளிக்க அரசு தரப்பு நேரம் கோரியதால் புதிய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 28 ஆம் தேதி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் அரசு வழக்கறிஞரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஜனவரி 8ஆம் தேதி ஒரு ஊடக அறிக்கையில், சட்டத்துறை தலைவர் 47 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும்  எடுக்க முடிவு செய்திருந்தார் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset