நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய தங்க வணிகர்கள் மாநாடு; நாட்டின் தங்க வணிகம் அனைத்துலக ரீதியில் விரிவாக்கம் காண்கிறது: டத்தோ அப்துல் ரசூல்

கோலாலம்பூர்:

மலேசிய தங்க வணிகர்கள் மாநாட்டின் வாயிலாக நாட்டின் தங்க வணிகம் அனைத்துலக ரீதியில் விரிவாக்கம் காண்கிறது.

மலேசிய தங்க சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் இதனை கூறினார்.

மூன்றாவது மலேசிய தங்க வணிகர்கள் மாநாடு கடந்த இரண்டு தினங்களாக கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
டத்தோஸ்ரீ லூய்ஸ் எங் தலைமையில் இம்மாநாடு நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட 33 நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாடு மலேசியாவுக்கு மிகப் பெரிய பெருமைச் சேர்த்துள்ளது.

குறிப்பாக உலக ரீதியிலான தங்க
வணிகர் இங்கு ஒன்றுக் கூடி உள்ளனர். 

இந்த வணிகத்தின் அடுத்த திட்டங்கள், சவால்கள், முதலீடுகள் உட்பட பல விவகாரங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்படுகிறது.

இம்மாநாடு மலேசிய தங்க நகை வணிகர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.

குறிப்பாக மலேசிய தங்க வணிகம் இம்மாநாட்டின் வாயிலாக விரிவாக்கம் கண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என்று டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset