நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காரில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 2 ஆண்கள் கைது: போலிஸ்

செந்தூல்:

காரில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 2 ஆண்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

செந்தூல் மாவட்ட போலிஸ் தலைவர் அஹ்மத் சுகார்னோ இதனை கூறினார்.

இங்குள்ள ஜின்ஜாங்கில் உள்ள தாமான் இந்தான் பைடூரியில் பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சம்பந்தப்பட்ட இருவர் அநாகரீகமான செயல்களைச் செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் முறையே 24,  29 வயதுடையவர்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒரு புரோட்டான் எக்ஸ் 50 காரைக் கண்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

போலிஸ் பரிசோதனையில் பின்புற பயணிகளின் இருக்கையின் தரையில் திரவம் இருப்பதாக நம்பப்படும் வெள்ளை திசுக்களை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஒரு பேரங்காடியில் தொலைபேசி விற்பனையாளராக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset