
செய்திகள் மலேசியா
3-ஆவது முறையாக நம்பிக்கை நட்சத்திர விருதுகள் 2024
கோலாலம்பூர்:
1997-ஆம் ஆண்டு மாத இதழாகத் தமது பயணத்தைத் தொடங்கிய நம்பிக்கை குழுமம், 2021-ஆம் ஆண்டில் இணைய ஊடகத் துறையில் கால் பதித்தது.
2022-ஆம் ஆண்டு முதல் முறையாக நம்பிக்கை விருதுகளை அறிமுகப்படுத்தி 27 பெருந்தகைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது.
அதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட 2-ஆவது விருது விழாவில் 32 பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தற்போது 3-ஆவது முறையாக, நம்பிக்கை நட்சத்திர விருதுகள் 2024 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 40 பேருக்கு விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொழி, கலை, இலக்கியம், தொழில்துறை சார்ந்த விருதுகளும் இதில் அடங்கும். இம்முறை கலைத் துறையில் 13 விருதுகள், சமூக ஊடகக் கலைஞர்களுக்கு 10 விருதுகளும் வழங்கப்படும்.
இந்த விருது விழா நவம்பர் 30-ஆம் தேதி, சனிக்கிழமை, கோலாலம்பூர், டேவான் துன் ரசாக், பேங்க் ரக்யாட் மாநாட்டு மண்டபத்தில், இரவு 7 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கும்.
மலேசியாவின் முதன்மை செய்தி ஊடகமாக வலம் வரும் நம்பிக்கை, திறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் நோக்கத்துடன் இடைவிடாமல் இந்த விருது விழாவை நடத்துவதாக நம்பிக்கை குழுமத்தின் தோற்றுநர் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மது இக்பால் இராவுத்தர் தெரிவித்தார். சமூகம் சார்ந்த சிறப்பு விருதுகள் நீதிபதிகள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் அக் குழுவிற்கு டத்தோஶ்ரீ இக்பால் தலைமையேற்றுள்ளார்.
இதில் கலை, சமூக ஊடகம் சார்ந்த இருபத்து மூன்று(23) விருதுகளும் பத்து(10) நாட்கள் நடக்கவிருக்கும் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவுகளில் ஐந்து(05) பேர் வேட்பாளர்களாகவும், அவர்களில் மக்களின் மகத்தான ஆதரவை பெற்று அதிக வாக்குகளை பெற்ற நபர் சம்பந்தப்பட்ட விருதினைச் தட்டிச் செல்வார்.
மேலும், "மலேசிய மாமனிதர்" துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருதும், கலைத் துறை வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட உள்ளன.
சிவப்பு கம்பள வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்கும். கலைஞர்கள், பிரமுகர்கள், வருகையாளர்கள் என 500 பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விருது விழா குறித்த அனைத்து தகவல்களுக்கும் Nambikkai Online சமூக ஊடகங்களை வலம் வரலாம்.
அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்த விருது விழாவில் கலந்து சிறப்பிக்க முடியும்.
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு, நம்பிக்கை செயலகத்தை (016-9305786) தொடர்பு கொள்ளலாம்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 12:26 am
சிகாம்புட் தொகுதி இந்தியர்களுக்கு மஇகா உரிய சேவைகளை வழங்கும்: டத்தோ சிவக்குமார்
July 14, 2025, 6:14 pm
நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் பேரணி வெற்றி: மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அறிவிப்பு
July 14, 2025, 6:00 pm
நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கவே பேரணியில் கலந்து கொண்டேன்: நூருல் இசா
July 14, 2025, 5:45 pm
மன்னிப்பு கேட்ட மகாதீர்: பிறந்தநாள் பிக்னிக்கில் உடல்நலக்குறைவு
July 14, 2025, 5:41 pm
லோரிக்குள் சிக்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்: காரில் பயணித்தவருக்கு கால் முறிந்தது
July 14, 2025, 5:33 pm
கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற லாரியின் காணொலி வைரல்
July 14, 2025, 5:29 pm
குறைந்த கட்டணச் சேவையே கேடிஎம் லாபம் ஈட்டாததற்குக் காரணம்: அந்தோனி லோக்
July 14, 2025, 4:56 pm
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்தனர்
July 14, 2025, 3:12 pm
வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்
July 14, 2025, 3:11 pm