நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு நிறைவேறியது

கோலாலம்பூர்:

மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு மக்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.

67 வயதுடைய எம். சின்னகருப்பன் தனது மகள் கலைமகளை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்.

கலைமகள் கிளந்தான் மலேசய பல்கலைக்கழகத்தின் உயர் கல்வியை தொடரவுள்ளார்.

ஆனால் அவருக்கான நுழைவுக் கட்டணமாக 3 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்துவதற்கு பணம் இல்லை.

இதன் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சின்னகருப்பன் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் உதவியை நாடினார்.

அவரின் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் அவருக்கு தேவையான பணம் கிடைத்துள்ளது.

இதன் வாயிலாக கலைமகள் தற்போது உயர் கல்வியை தொடரவுள்ளார்.

அதே வேளையில் உதவிய அனைவருக்கும் சின்னகருப்பன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset