செய்திகள் மலேசியா
மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு நிறைவேறியது
கோலாலம்பூர்:
மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு மக்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.
67 வயதுடைய எம். சின்னகருப்பன் தனது மகள் கலைமகளை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்.
கலைமகள் கிளந்தான் மலேசய பல்கலைக்கழகத்தின் உயர் கல்வியை தொடரவுள்ளார்.
ஆனால் அவருக்கான நுழைவுக் கட்டணமாக 3 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்துவதற்கு பணம் இல்லை.
இதன் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சின்னகருப்பன் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் உதவியை நாடினார்.
அவரின் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் அவருக்கு தேவையான பணம் கிடைத்துள்ளது.
இதன் வாயிலாக கலைமகள் தற்போது உயர் கல்வியை தொடரவுள்ளார்.
அதே வேளையில் உதவிய அனைவருக்கும் சின்னகருப்பன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 4:46 pm
கெப்போங் கொலை வழக்கு: இந்திய நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
March 31, 2026, 4:23 pm
எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்
March 31, 2026, 3:27 pm
எஸ்.பி.எம். தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை சரிவு: கல்வி அமைச்சின் நடவடிக்கைகள்
March 31, 2026, 3:12 pm
கூலாய் - செடெனாக் பாதையில் கோர விபத்து: வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது
March 31, 2026, 2:55 pm
மலேசியக் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
March 31, 2026, 2:44 pm
