செய்திகள் மலேசியா
மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு நிறைவேறியது
கோலாலம்பூர்:
மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு மக்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.
67 வயதுடைய எம். சின்னகருப்பன் தனது மகள் கலைமகளை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்.
கலைமகள் கிளந்தான் மலேசய பல்கலைக்கழகத்தின் உயர் கல்வியை தொடரவுள்ளார்.
ஆனால் அவருக்கான நுழைவுக் கட்டணமாக 3 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்துவதற்கு பணம் இல்லை.
இதன் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சின்னகருப்பன் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் உதவியை நாடினார்.
அவரின் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் அவருக்கு தேவையான பணம் கிடைத்துள்ளது.
இதன் வாயிலாக கலைமகள் தற்போது உயர் கல்வியை தொடரவுள்ளார்.
அதே வேளையில் உதவிய அனைவருக்கும் சின்னகருப்பன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 4:48 pm
அம்னோ-பாஸ் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன: புவாட் குற்றச்சாட்டு
June 29, 2026, 4:29 pm
அரசு ஊழியர் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சந்தேக நபரை காஜாங் காவல்துறை தேடி வருகிறது
June 29, 2026, 3:03 pm
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் நியமனம்
June 29, 2026, 2:56 pm
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பண்புமிக்க தலைமுறையை உருவாக்கும்: யுனேஸ்வரன்
June 29, 2026, 12:24 pm
துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு
June 29, 2026, 12:23 pm
