செய்திகள் மலேசியா
சமயத்தை சச்சரவுக்கான கருவியாக மாற்ற வேண்டாம்: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன்
கோலாலம்பூர்:
மதத்தை சமூகத்தில் சச்சரவுகளுக்கான கருவியாக மாற்ற வேண்டாம் என தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் மலேசிய மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக சமூக ஊடகங்களில் வெறுப்புகளையோ அல்லது கோபத்தை தூண்டும் செயல்களை தவிர்த்து, நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தைப்பூசம் திருநாளை முன்னிட்டு இன்று தனது முகநூல் பதிவில், “அமைதியான, செழிப்பான, ஒன்றுபட்ட மலேசியாவுக்காக ஒற்றுமை மனங்களில் மலர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையும் புரிதலும் ஒரு நாட்டின் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பதாகவும், இந்த பல்வகைமையில்தான் மலேசியாவின் வலிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
அதே பதிவில், இந்து சமூகத்தினருக்கு தைப்பூசம் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், அந்த விழா அனைவருக்கும் ஆசீர்வாதத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 5:34 pm
மலேசிய RON95 பெட்ரொலை வாங்கும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்
January 30, 2026, 2:48 pm
TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 95 சதவீதத்தைத் தாண்டியது: ஜாஹித்
January 30, 2026, 12:26 pm
கிள்ளான் பகுதியில் தீயணைப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கை: சாலை விபத்து தவிர்க்கப்பட்டது
January 30, 2026, 12:20 pm
பொம்மை கடையில் தீ விபத்து: சுமார் RM 1 மில்லியன் இழப்பு
January 30, 2026, 11:50 am
நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் குப்பை சேகரித்து வந்த 69 வயது பெண்ணின் பிடிவாதம்
January 30, 2026, 11:16 am
தப்பிக்க முயன்ற 218 வெளிநாட்டவர்கள் ட்ரோன் உதவியுடன் அதிரடி கைது
January 29, 2026, 11:05 pm
மனிதக் கடத்தல் வலையில் சிக்கிய 57 சிறுவர்கள் உட்பட 138 பேர் மீட்பு: டத்தோ குமார்
January 29, 2026, 9:18 pm
நெகிரி செம்பிலானில் அதிரடி நடவடிக்கை: கட்டுமானத் தளத்தில் 30 வெளிநாட்டவர் கைது
January 29, 2026, 7:00 pm
