
செய்திகள் உலகம்
தாய்லாந்து பள்ளிப் பேருந்தில் தீப்பிடித்து: 25 பேர் மரணம்
பேங்காக்:
தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
அந்தப் பேருந்தில் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 44 பேர் பயணம் செய்ததாகத் தகவல் வெளியானது.
நேற்று நிகழ்ந்த அந்தத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எத்தனை பேர் என்று சரியாகத் தெரியாத நிலையில் தீயை அணைத்த பிறகு, 25 பேர் மாண்டிருக்கலாம் என கருதப்படுவதாகத் தாய்லாந்துப் போக்குவரத்து அமைச்சர் சூரியா ஜுங்ருங்ரீங்கிட் தெரிவித்தார்.
பேருந்தில் 38 மாணவர்களும் ஆறு ஆசிரியர்களும் இருந்ததாக முதலில் வந்த தகவல் தெரிவித்தது.
அவர்களில் மூன்று ஆசிரியர்களும் 16 மாணவர்களும் மீட்கப்பட்டதால் எஞ்சிய 25 பேரும் மாண்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம் என்ற அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
யாரும் மீட்கப்படாமல் காணாமல் போயுள்ளார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, என்றும் அமைச்சர் கூறினார்.
பேருந்து எரிந்துகொண்டு இருந்தநிலையில் கரும்புகை வெளியேறியதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களிலும் உள்ளூர் செய்தித்தளங்களிலும் பதிவேற்றப்பட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am