நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ அன்வார் நீண்டகாலம் பிரதமராக பதவி வகிப்பார்: கிட் சியாங் கணிப்பு

கோலாலம்பூர்:

மலேசிய வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்களில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருவராக இருப்பார்.

மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங் இதனை கணித்துள்ளார்.

முந்தைய மூன்று பிரதமர்களான இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மொஹைதின் யாசின், துன் மகாதீர் முஹம்மது (இரண்டாம் முறை) ஆகியோரைவிட அன்வாரின் நிர்வாகம் இப்போது நீண்டுள்ளது.

இருப்பினும் டத்தோஶ்ரீ அன்வார் கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களில் மூன்று பேருக்கு மேல் பணியாற்றியது மட்டுமல்லாமல், மலேசிய வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர்களில் ஒருவராக ஆனார்.

ஜொகூரில் உள்ள பத்து பஹாட்டில் சீன வம்சாவளியைச் சேர்ந்த சங்கத்தின் கூட்டத்தில் முன்னாள் மூத்த ஜசெக தலைவரான அவர் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset