நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டாயத் தொழிலாளர் விவகாரத்தில் குளோபல் இக்வான் நிர்வாகத்தைச் சேர்ந்த 24 பேருக்கு தடுப்புக் காவல்

கோலாலம்பூர்:

கட்டாயத் தொழிலாளர் விவகாரத்தில் குளோபல் இக்வான் நிர்வாகத்தைச் சேர்ந்த 24 பேருக்கு 5 நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ  ரஸாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.

குளோபல் இக்வான் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் தொழிலாளர்களை கட்டாயமாக வேலைக்கு அமர்த்தியது தொடர்பில் குளோபல் இக்வான் நிர்வாகத்தைச் சேர்ந்த 24 பேர் மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்பட்டது இல்லை என்ற புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset