நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செத்தியா அலாமில் தங்க சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளோட்டியை போலிசார் தேடுகின்றனர்

ஷாஆலம்:

செத்தியா அலாமில் ஆடவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளோட்டியை போலிசார் தேடி வருகின்றனர்.

ஷாஆலம் மாவட்ட போலிஸ் தலைவர் முகமத் இக்பால் இப்ராஹிம் இதனை கூறினார்.

நடந்து சென்ற ஆடவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட 29 வயதான கார் விற்பனையாளரிடமிருந்து போலிசார் புகாரை பெற்றனர்.

ஆரம்பத்தில் சம்பந்தப்பட்ட ஆடவரின் காரை மோட்டார் சைக்கிளோட்டி மோதி விழுந்தது போன்று நடித்தார்.

இதை தெரியாமல் கார் விற்பனையாளர் வெளியே சென்று பார்த்தார்.

உடனே மோட்டார் சைக்கிளோட்டி சம்பந்தப்பட்ட ஆடவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியை தேடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset