நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்சாரம், நீர் ஆகியவற்றைத் திறம்பட பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்படும்: தெங்கு ஜஃப்ருல்

கோலாலம்பூர்: 

எதிர்காலத்தில் மின்சாரம், நீர் ஆகியவற்றைத் திறம்பட பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது என்று அனைத்துலக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெரிவித்தார். 

நாட்டில் தரவு மைய முதலீட்டின் அதிகரிப்புக்கு ஏற்ப, மின்சாரம், நீர் விநியோகத்தின் நம்பகத்தன்மை கட்டுப்படுத்தப்பட்டுத் திறம்பட பயன்படுத்த வேண்டும். 

வழிகாட்டுதல்கள் தரவு மையங்களின் சுற்றுச் சூழலின் தடயத்தைக் குறைக்கும்.

அதே வேளையில் அவற்றின் செயல்பாட்டுத் திறனை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார்.

கடந்த வாரம், உற்பத்தித் துறைக்கான சுற்றறிக்கை பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பையும் (CEPF) அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset