செய்திகள் மலேசியா
இனி மக்களவையில் சர்க்கரையில்லா புதன்: ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல்
கோலாலம்பூர்:
எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து அனைத்து புதன்கிழமைகளும் மக்களவையில் சர்க்கரையில்லாத நாளாக இருக்கும் என நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரும் ஒவ்வொரு புதன்கிழமைகளும் சர்க்கரை இல்லாத நாளாக இருக்கும் எனவும் ஊடகங்கள் உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் சர்க்கரையற்ற உணவு பொருள்களே வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“அக்டோபர் 14ஆம் தேதித் தொடங்கி டிசம்பர் 12ஆம் தேதி முடியும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேநீர் போன்ற பானங்களில் கூட சர்க்கரை சேர்க்கப்படாது. சர்க்கரையற்ற உணவுகள் வழங்குவதை நாடாளுமன்றம் உறுதி செய்யும்,” என நாடாளுமன்றச் சபாநாயகர் ஜொஹாரி அப்துல் கூறினார்.
மேலும், நாம் ஆரோக்கியமான சமுதாயமாக மாறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 1, 2024, 11:54 am
சிக்கலான ஊழல் குற்றங்களின் விசாரிக்கும் முறையை எம்ஏசிசி மாற்றியுள்ளது
October 1, 2024, 11:53 am
செயற்கை நுண்ணறிவு மையமாக மலேசியாவை மாற்றுவதற்கான இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது: பிரதமர்
October 1, 2024, 11:52 am
செத்தியா அலாமில் தங்க சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளோட்டியை போலிசார் தேடுகின்றனர்
October 1, 2024, 11:51 am
பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி
October 1, 2024, 11:39 am
வசதிகுறைந்த மாணவர்களுக்கு மலேசிய சபா பல்கலைக்கழகம் உதவியது
October 1, 2024, 10:16 am