நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனி மக்களவையில் சர்க்கரையில்லா புதன்: ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் 

கோலாலம்பூர்: 

எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து  அனைத்து புதன்கிழமைகளும் மக்களவையில் சர்க்கரையில்லாத நாளாக இருக்கும் என  நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரும் ஒவ்வொரு புதன்கிழமைகளும் சர்க்கரை இல்லாத நாளாக இருக்கும் எனவும் ஊடகங்கள் உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் சர்க்கரையற்ற உணவு பொருள்களே வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“அக்டோபர் 14ஆம் தேதித் தொடங்கி டிசம்பர் 12ஆம் தேதி முடியும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேநீர் போன்ற பானங்களில் கூட சர்க்கரை சேர்க்கப்படாது. சர்க்கரையற்ற உணவுகள் வழங்குவதை நாடாளுமன்றம் உறுதி செய்யும்,” என  நாடாளுமன்றச் சபாநாயகர் ஜொஹாரி அப்துல் கூறினார்.

மேலும், நாம் ஆரோக்கியமான சமுதாயமாக மாறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset