
செய்திகள் உலகம்
பூமியைச் சுற்றிவரும் இரண்டாவது நிலா: 2 மாதங்களுக்கு தெரியும்
லண்டன்:
பூமிக்கு 2 மாதங்களுக்கு மட்டும் ஒரு தற்காலிக நிலா தெரியும் என்று நாசா அறிவித்துள்ளது.
இது உலகளாவிய மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பூமியை சுற்றி வரும் ஒரு இயற்கை சாட்டிலைட் தான் நிலா. தற்போது அதேபோல ஒரு விண்கல், பூமியை சிறிது காலம் சுற்றிவிட்டு செல்லவிருக்கிறது.
இந்த நிகழ்வு நடக்கப்போகிறதென்று, நாசா உதவி பெறும் விண்கல் நிலப்பரப்பு-தாக்கம் கடைசி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் குறித்து கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாசா கண்டறிந்தது.
33 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல், இன்று முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை பூமியை சுற்றிவர உள்ளது.
55 நாட்கள் சுற்றி வரும் இந்த விண்கல்லுக்கு, ‘2024 பிடி5’ என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விண்கல் பூமியை முழுவதும் சுற்றாது என்றும், ஒரு வில் வடிவத்தில் மட்டும் பூமியை சுற்றிவிட்டு, பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெளியேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm
கடற்படை தளபதி, அணுசக்தி விஞ்ஞானி பதவி பறிப்பு
June 28, 2025, 11:06 am
காசாவில் அடுத்த வாரம் போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை
June 28, 2025, 10:55 am
தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
June 27, 2025, 10:49 am
அமெரிக்காவின் கன்னத்தில் நாம் பலமாக அரை கொடுத்தோம்: அயத்துல்லா அலி கொமேனி
June 26, 2025, 8:56 pm
அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் மேஜர் கொலை
June 26, 2025, 5:03 pm