நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் பெண்களை பாலியல் தொழிலாளர்களாக மாற்றிய வட்டி முதலை தொடர்பில் விசாரணைகள் நடக்கிறது: போலிஸ்

ஜார்ஜ்டவுன்:

பினாங்கில் பெண்களை பாலியல் தொழிலாளர்களாக மாற்றிய ஆலோங் எனும் வட்டி முதலை தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகிறது.

பினாங்கு போலிஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மத் இதனை கூறினார்.

ஆலோங்கால் தாம் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாக சம்பந்தப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

அப் பெண்ணின் வீடியோ பதிவுகள் டிக்டாக்கில் பரவியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் போலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட பெண் இன்னும் பினாங்கில் தான் உள்ளார். அவர் இருக்கும் இடத்தையும் போலிசார் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் இந்த வழக்கைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போதைக்கு எங்களால் வெளியிட முடியாது.

ஏனெனில், மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset