நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வான் தொடர்பான 3 வழக்குகள் நாளை புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்

கோலாலம்பூர்:

குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் தொடர்புடைய மூன்று வழக்குகள் நாளை புத்ராஜெயா, நெகிரி செம்பிலானில் உள்ள மூன்று தனி நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் 354ஆவது பிரிவின் கீழ் நெகிரி செம்பிலானில் உள்ள போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

இது ஒரு உஸ்தாஸ் சம்பந்தப்பட்ட வழக்கு என கூறப்படுகிறது.

சிரம்பான் 2 நீதிமன்றத்தில்  பாலியல் துஷ்பிரயோக வழக்குக்காக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக அதே மையத்தில் உள்ள உஸ்தாஸ் மீது குற்றம் சாட்டப்படும்.

அதே வேளையில் குளோபல் இக்வான்  உறுப்பினராக உள்ள ஒருவர் நாளை காலை 8 மணிக்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என்று கோலாலம்பூர் போலிஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset