நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓப் குளோபலில் கைது செய்யப்பட்ட மூவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுத்தனர்

சிரம்பான்:

ஓப் குளோபலில் கைது செய்யப்பட்ட மூவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

குளோபல் இக்வானுடன் இணைக்கப்பட்ட கோலா பிலாவில் உள்ள ஒரு மதரஸாவின் மூன்று  உதவி ஆசிரியர் ஓப் குளோபலில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட முகமத் ஹபிப் (வயது 21), முயம்மத் குன்னாய்ஸ் (வயது 20), அஹ்மத் நட்ஸ்புல் இஷாம் (வயது 22) ஆகியோர் இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

கடந்த 2022 முதல் 2023 வரை சிறுவர்களுக்கு எதிராக பாலியல்  வன்கொடுமை  செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதில் முகமத் ஹபிப், முயம்மத் குன்னாய்ஸ் தலா 6 குற்றச்சாட்டுகளும் அஹ்மத் நட்ஸ்புல் இஷாம் மீது 3 குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டது.

நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் அவர்கள் மீது தனித்தனியாக குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset