நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்

ஷாஆலம்:

குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் அலி உட்பட 19 பேருக்கு  ஏழு நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.

ஓப் குளோபல் விசாரணையின் கீழ் 7 பெண்கள் உட்பட 19 பேரை போலிசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் அனைவரும் 25 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று மாலை 3 மணிக்கு ஷாஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டன.

விசாரணைக்கு உதவும் நோக்கில் அவர்களுக்கு தடுப்பு காவல் கோரப்பட்டது.

இம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி  வான் நோரா நிசா அவர்களுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்

இதனை தொடர்ந்து  அவர்கள் ஷாஆலம் போலிஸ் தலைமையக லாக்கப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset